வலைப்பதிவுகள் செயற்படும் விதம் - 2 (அல்லது) எசப்பாட்டுக் கலாச்சாரம்
மனித வரலாற்றின் காலகட்டத்தில் மொழி, கலைகள், அறிவியல் இன்னபிற அறிவுசார் துறைகளின் வளர்ச்சி அதிவிரைவாக இருந்தவை தடைகளின்றி கருத்துப்பரிமாற்றம் நடந்த நாட்கள்தாம். ஒற்றை ஓடையாக அறிவு எப்பொழுதும் ஒழுகியதில்லை. அறிஞர்கள் உலகில் கருத்தரங்கம், குழு விவாதம் என்பவை அறிவுப் பெருக்கத்தை விரைவுபடுத்தும் ஊக்கிகளாகச் செயல்படுவதை மனித வரலாற்றின் நெடுகிலும் காணமுடியும். மறுபுறம் சராசரி மனிதர்களின் திண்ணை கூடிப் பேசல், டீக்கடை அரட்டைகள் என்று உலகியல் நெருக்கடிக்களுக்கு இடையில் கணநேரக் கருத்துப் பரிமாறல் நடப்பதைக் காணமுடியும். தகவல் பரிமாற்றம்தாண்டி கலைகளிலும் இது நெடுகிலும் பரவியிருப்பதைப் பார்க்கமுடியும். கமலையில் நீர் சேந்தும்பொழுது எசப்பாட்டும் எதிர்ப்பாட்டும் நம்மூரின் கலாச்சார வெளிப்பாடுகள். இணையம் அந்த எசப்பாட்டிற்கான வெளியை விரித்திருக்கிறது.
Read the rest of this entry »
வலைப்பதிவுகள் செயல்படும் விதம் - 1
தமிழில் வலைப்பதிவுகள் தோன்றி ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இப்பொழுது இப்படி ஒரு தலைப்பிட்டு ஒன்றை எழுதுவதன் அபத்தம் தெரிகிறது. மறுபுறத்தில் சென்ற இரண்டு வாரத்தில் பிரபு ராஜதுரை பதிவு மற்றும் என் பதிவில் அச்சு ஊடகம், மின்னூடகம், இவை செயல்படும் விதங்கள் குறித்த கருத்துப் பரிமாறல்களைத் தொகுத்து இப்படியொன்றை எழுதினால் பாவமில்லை என்றுதான் தோன்றுகிறது.
முன்னதாக - இது வலைப்பதிவுகள் செயற்பாட்டைக் குறித்த மதிப்பீடோ விமர்சனமோ இல்லை. வெறும் நுட்ப ரீதியான என் புரிதல்களைத் தொகுத்து எழுதுவதே இதன் நோக்கம். வலைபபதிவுகள் எப்படித் தோன்றின? (பத்து மதிப்பெண்கள்), தமிழின் முதல் வலைப்பதிவாளர் யார்? (இருபது மதிப்பெண்கள்) போன்ற கேள்விகளைத் தெரிவில் விட்டுவிடுகிறேன்.
Read the rest of this entry »
செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்
பிரபு ராஜதுரையின் இந்தக் கேள்வி (’ஞாநி’களுக்கு எதற்கு அறிவு?)மிகவும் முக்கியமானது.
ஞாநியின் கட்டுரை ஒன்றை முன்வைத்து சஞ்சிகைகளில் பத்தி எழுதுபவருக்கு எந்தவிதமான மொழியறிவும் தேவையில்லை போலிருக்கிறதே என்று வியந்திருக்கிறார். இது கட்டாயமாக அவலநிலைதான். ஞாநியின் அந்தக் கட்டுரையின் இடத்தில் வேறு எந்தத் தமிழ்ப்பத்தியாளரின் கட்டுரையையும் போட்டு இதே விமர்சனத்தை முன்வைக்க முடியும். சான்றான்மை என்று ஒரு பதம் உண்டு; தான் செய்யும் காரியம் அனைத்திலும் தன் முழு எத்தனத்தையும் பயன்படுத்தி காரியம் எல்லாவற்றிலும் முழுமையடைவது சான்றோர்கள் குறித்த வரையறை. துரதிருஷ்டவசமாக இன்றைய நிலையில் அப்படி உதாரணம் காட்ட தமிழில் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு.
Read the rest of this entry »
டாடா - ஜகுவார்
அதிகார்வபூர்வமாக இப்பொழுது ஜகுவார், லாண்ட் ரோவர் இரண்டும் டாடாவின் கையில். இந்திய உற்பத்தித்துறையில் இது ஒரு முக்கியமான மைல்கல்.
அதிசொகுசு கார் டாடாவினால் மாசுபடப்போகிறது என்று எழுந்த கூக்குரல்கள்கள் எதுவும் எடுபடாமல் போய்விட்டன (என் முந்தைய பதிவு - அக்ரஹாரத்தில் கழுதை : டாடா, ஜகுவார், ஓரியண்ட் எக்ஸ்பிரஸ்). சமீபகாலமாக இந்தியா தகவல் நுட்பம் மட்டுமல்லாமல் பிற துறைகளிலும் சொல்லிக்கொள்ளத்தக்க உலக அதிர்வுகளை உண்டாக்கிவருகிறது. குறிப்பாக மருந்து உற்பத்தி மற்றும் தொழில்பொருட்கள் உற்பத்தித் துறை. ஆனால், மற்றெல்லாவற்றையும்விட இது பெரிய அதிர்வை உண்டாக்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. முக்கியமாக எங்கள் ஊர் டொராண்டோவில் (தற்பொழுது உலகிலேயே கார் உற்பத்தியில் முதலிடம் ஒண்டாரியோ மாநிலம்தான்). ஒரு காலத்தில் ஜகுவார் பிரிட்டனின் கனவுக் காராக இருந்தது. போர்ட் அதை வாங்கி அதன் பிம்பத்தைச் சிதைத்தது (தற்பொழுது நிறைய ஜகுவார் கார்களில் ஆளியக்கி மாற்றியம் (Manual Transmission) கிடையாது. ஸ்போர்ட்ஸ் கார் என்ற பிம்பத்தைத் தானியங்கி (Automatic) கொண்டு தூக்கிப் பிடிக்க முடியாது).
டாடா நானோ காரை அறிமுகப்படுத்தியபொழுது இங்கிருந்து பெரும் கூச்சல் எழும்பியது. ஒருபுறம் இதை பொம்மைக்கார் என்று சொன்னாலும் உள்ளூர இதே போன்ற பிம்பத்தைத்தான் டொயோட்டாவின் கொரோலாவும் ஹோண்டாவின் சிவிக்கும் தாங்கி உள்வந்ததையும் இன்று இவை இரண்டும் உலகிலேயே அதிகம் விற்கும் கார்களாக இருப்பதையும் அவர்களால் நினைவுகூறாமல் இருக்க முடியவில்லை (சிவிக் முதலில் வந்தபொழுது Passenger Side rear-view mirror அதில் கிடையாது). எனவே உலகத்தை மாசுபடுத்தப்போகிறது என்று பச்சைத் தொப்பியை அணிந்துகொண்டு எச்சரிக்கை விடுக்கிறார்கள். இங்கெல்லாம் புருஷன்-பொண்டாட்டி இரண்டு பேர் இருக்கும் வீடுகளில் மூன்று கார்கள் உண்டு. தினசரி வேலைக்குப் போக இருவருக்கும் தலா ஒன்று, வார இறுதியில் படகை இழுத்துச் செல்ல ஒரு SUV). இந்தியாவிலும் மொஸாம்பிக்கிலும் நானோ கார் ஓடினால் கரிவளி வானத்தை மாசுபடுத்திவிடாது. இப்பொழுது ஜகுவாரின் பெயரும் சேர்வதால் டாடாவினால் நானோவை முக்கியமான காராக்கமுடியும் என்று உறைக்கத் தொடங்கியிருக்கிறது.
டாடாவுக்கு ஜகுவாரைக் காட்டிலும் லாண்ட் ரோவரின் தொழில்நுட்பம் மிகவும் பயன் திறமையாகக் கையாண்டு விற்பனையைப் பெருக்கினால் இந்தியாவின் மதிப்பு கட்டாயம் உயரும். இந்தியாவில் இதைச் செய்வதற்கு இப்பொழுதைக்கு டாடாவைத் தவிர வேறு யாராலும் முடியாது. Good Luck!.
நகைச்சுவை, அவலம், கொடூரம்
ஐந்து வருடங்களாகின்றன - அமெரிக்கா ஈராக்கின்மீது போர்தொடுத்து. கொண்டாட டிக் செய்னி பாக்தாத் சென்றிருக்கிறார்.
“If you look back on those five years it has been a difficult, challenging but nonetheless successful endeavour … and it has been well worth the effort,” Cheney, an architect of the invasion, said after meeting Iraqi leaders.
U.S. Vice President Dick Cheney on Monday declared the 2003 U.S.-led invasion of Iraq a “successful endeavor” during a visit to Baghdad, on the same day a woman suicide bomber killed 40 people.
“All Americans can be certain that we intend to complete the mission so that another generation of Americans does not have to come back here and do it again,” Cheney told about 3,000 U.S. troops at Balad Air Base 70 km (45 miles) north of Baghdad.
பில்லி, சூன்யம், தொலைக்காட்சி
விட்டு விடு கறுப்பு, விடாதே செருப்பு, என்று அபத்தத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு இடையே இப்படியொரு உருப்படியான (கல்வி) நிகழ்ச்சி இந்தியத் தொலைக்காட்சி ஒன்றில் வந்திருப்பது வியப்பான விஷயம்.
India TV தொலைக்காட்சியில் சனல் எடமருகு என்பவர் பில்லி சூன்யம் வைக்கும் சாமியார் ஒருவருடன் நேரடியாக மோதியிருக்கிறார். சனல் எடமருகு Indian Rationalists Association-ன் தலைவர். போட்டியில் சாமியார் தன் மந்திர பலத்தைப் பயன்படுத்தி எடமருக்குவைத் பலத்த முயற்சிகளுக்கும் பின்னர் சடமருக்குவைக் கொல்ல முடியாமல் தோற்றுப் போயிருக்கிறார். போட்டியில் சனல் மீது நீர் தெளிக்கப்பட்டிருக்கிறது, மயிற்பீலியால் அவர் வருடப்பட்டிருக்கிறார். இன்னும் சாமியார் மாவு பிசைந்து அதை ஊசியால் குத்தியிருக்கிறார்; கத்தியால் வெட்டியிருக்கிறார். தீ வளர்த்து வெட்டப்பட்ட மாவைப் பலி கொடுத்திருக்கிறார். இறுதியாக சாமியார் தோற்றுப்போனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நிகழ்ச்சி எங்காவது இணையத்தில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. நல்ல தமாசாக இருந்திருக்கும். எப்பொழுதாவது ஒருமுறைதான் தொலைக்காட்சியில் இதுமாதிரி நல்ல நிகழ்ச்சிகள் சாத்தியம். சனல்-க்குப் பாராட்டுகள்.
தகவல்: Nanopolitan
இனிய π தின வாழ்த்துக்கள்
இன்று மார்ச் 14 (3.14) உலகமெங்கும் π தினம் கொண்டாடப்படுகிறது! கணக்கில் பல அற்புதமான எண்கள் உள்ளன பை, i, e என்று இவை ஒவ்வொன்றும் விசேடமானவை. இவற்றுக்குள்ளே πமிகவும் விசேடமானது. πகுறித்து சில உபயோகமான(மற்ற) தகவல்கள்:
Read the rest of this entry »
பெண் விஞ்ஞானிகளைப் போற்றுவோம் - 2008

அறிவியலில் சிறப்பான சாதனைகள் புரிந்த பெண் விஞ்ஞானிகளைக் கௌரவிக்கும் முகமாக லேரெல் நிறுவனத்தின் பணவுதவியுடன் வழங்கப்படும் யுனெஸ்கோ-லோரெல் பரிசுகள் இந்த ஆண்டிற்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றன (இது குறித்த என் சென்ற வருடத்திய பதிவு இங்கே).
ஆசியா : பேராசிரியர் லிஹாத் அல்-கஸாலி (Prof. Lihadh Al-Gazali) ஐக்கிய அரபுக் குடியரசு
பேரா. அல்-கஸாலி மரபுவழி நோய்பரவல் குறித்த அவரது ஆராய்ச்சிக்காகப் பரிசு பெருகிறார். நோய்சார் மரபியல் துறை மரபு ரீதியாத் தொடரும் வியாதிகளைப் பற்றியது. இது நோய்களுக்கும் அவற்றைத் தாங்கி சந்ததியாகப் பரவும் மரபணுக்களுக்குமான தொடர்பை ஆராய்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் நெருங்கிய குடும்பங்களுக்குள்ளே திருமணம் செய்துகொள்வது மிகப் பரவலான வழக்கமாக இருக்கிறது. இந்த நிலையில் மரபணுக்களால் சந்ததி தோறும் தொடரும் நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. உதடு மற்றும் காதுகளில் வடிவச்சிதைவு நோய் இந்தப் பகுதியில் மிக அதிகம், இதைப்போலவே திராணியற்ற எலும்புகளும் பல சந்ததிகளாகத் தொடர்கின்றன. ஒருபுறம் நோய்ச்செல்களை நுண்ணோக்கிமூலம் ஆராயும் செல்மரபியல் (Cytogenetics) உத்திகளின்மூலம் அறிவியல் ஆய்வுகளை முன்னெடுக்கும் அல்-கஸாலி மறுபுறம் கடந்த பதினேழு வருடங்களாக சமூகத்தில் மரபு நோய்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கப் பாடுபட்டு வருகிறார்.
Read the rest of this entry »
புத்தக விமர்சனம் : The Indian Clerk

![]()
இப்படியெல்லாம் கணிதச் சமன்பாடுகளை இடையிடையே போட்டு நாவல் என்று கையில் கொடுத்தால் படிக்க முடியுமா என்றுதான் முதலில் தோன்றியது. ஒன்றிரண்டு அறிவியல் புதினங்களைத் தவிர நான் சமன்பாடுகளைப் பெரிதும் புதினங்களில் கண்டதில்லை. டேவிட் லெவிட்டின் தி இந்தியன் க்ளர்க் நாவல் அற்புதமான புனைகளத்தைக் கொண்டது. முதலாம் உலகப் போருக்குச் சற்று முந்தைய காலத்திலிருந்து இந்தச் சரித்திர நாவல் துவங்குகிறது. சரித்திர நாவல்களில் நாம் பெரிதும் கண்டவை உண்மை நிகழ்வுகளினூடாக புனைவு மாந்தர்கள் உலவும் களங்களைத்தான். கற்பனை கதாபாத்திரங்கள் உண்மை சரித்திர நிகழ்வுகளில் பங்குபெறுவார்கள் (புலிநகக் கொன்றை நாவலில் கண்ணனும், நம்பியும் பெரியார் பேருரையைக் கேட்பதைப் போல). தொட்டுக்கொள்ள ஊறுகாயாக உண்மை சரித்திர நாயகர்கள் அவ்வப்போது வந்துபோனாலும் கதையின் மையமாக கற்பனை மாந்தர்களே பெரிதும் இருப்பார்கள். வேறொருவகையான சரித்திரப் புதினத்தில் உண்மைக் கதாமாந்தர்கள் கற்பனை சம்பவங்களில் இடம்பெறுவார்கள். (இருந்தபோதும் கதையின் பெரும நிகழ்வுகள் பெரிதும் சரித்திர சம்பவங்களை ஒத்திருந்தாக வேண்டும்). இந்த இரண்டாம் வகை சரித்திரப் புனைவுகள் அதிகம் எழுதப்படுவதில்லை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அதிகம் மாற்றமுடியாது, உண்மைக் கதைமாந்தர்களின் பிம்பத்தைப் பெரிதும் சிதைக்கமுடியாது என்ற புனைவு நெருக்கடிக்களுக்கு இடையில் கதாசிரியனுக்கான எல்லைகள் குறுகிச் செல்ல, கதாமாந்தர்களின் உளவியல், தனிப்பட்ட சம்பவங்கள், ஒன்றிரண்டு புனைவுப் பாத்திரங்களின் கோப்பு ஆகியவைமட்டுமே இதில் சாத்தியம். இத்தனைச் சிக்கல்களுக்கிடையில் டேவிட் லெவிட் இந்தப் புதினத்தை எழுதியதே ஒரு சாதனையாகத்தான் தோன்றுகிறது.
Read the rest of this entry »
மூளைச் செயலிழப்பு - மருத்துவரின் அனுபவப் பகிர்வு
அறிவியலின் துறைகளுக்குள்ளே மனிதன் பெரிதும் விந்தையாய் காண்பது மூளையின் செயற்பாட்டை. நவீன அறிவியலின் புரிதல்கள் போதுமான அளவில் இல்லை என்று ஏக்கமும் வருத்தமும் கொள்ளவைப்பது மனித மூளையைப் பற்றிய புரிதல்களை. மறுபுறத்தின் அறிவியல் பயிற்சியும், அறிவியல் நோக்கும் இல்லாதவர்கள் மனித மூளையின் செயற்பாட்டை முழுவதுமாக அறிவியலின் எல்லைக்குள்ளே நின்று புரிந்துகொள்ள இயலாது என்று கூச்சலிடுகிறார்கள். காதலையும், காமத்தையும், கருணையையும், வீரத்தையும் ஹார்மோன்களின் கணக்கீட்டுக்குள் கொண்டுவரமுடியாது என்பது இவர்கள் தரப்ப்பு வாதம். ஆனால் நவீன அறிவியல் கொஞ்சம் கொஞ்சமாக இதனை வெற்றி கொண்டு வருகிறது. இதற்கு அறிவியலுக்குப் பெரிதும் துணை நிற்பது குறைபாடுள்ள மூளையின் அமைப்பும் செயற்பாடும். ஸ்கீட்ஸோஃபெர்னியா, பார்க்கின்ஸன், மதியிறுக்கம் (ஆட்டிஸம்) போன்ற செயலிழப்புகளைக் கொண்டவர்களை நவீன அறிவியல் கருவிகளான செயல்முறை காந்த ஒத்திசை படக்கருவி (Functional Magnetic Resonance Imaging F-NMR) போன்றவற்றின் உதவியுடன் ஆராய்வது மூளையின் அமைப்பு-செயற்பாடு குறித்த புரிதல்களை உருவாக்கி வருகிறது.
இதுபோன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அதிகம் வாய்க்காத ஒரு அனுபவம் டாக்டர் ஜில் டெய்லருக்கு (Dr. Jill Taylor) டிசம்பர் 10, 1996 அன்று கிடைத்தது. அவர் மூளையின் இடதுபுறத்தில் இரத்தநாளம் ஒன்று வெடித்து சிறிய இரத்தக்கட்டி (Hemorrhage) உருவானது. தன்னிலை இழக்கத் தொடங்கிய ஜில் டெய்லர் அசைவு, பேச்சு, ஞாபகம், சுயநினைவு என்று ஒவ்வொன்றாக இழக்கத் தொடங்கினார். அதிருஷ்டவசமாக, உடனடி மருத்துவ உதவி கிடைத்தது. அடுத்த சில நாட்களில் மூளையில் அறுவைசிகிச்சை மூலம் ஒரு சிறிய பந்தின் அளவிற்குப் பெருத்திருந்த இரத்தக் கட்டி நீக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து முழுக்குணமடைய எட்டு ஆண்டுகளானது.
தன் மூளையின் ஒரு பாகம் செயலிழந்ததையும் அதைத் தொடர்ந்து தன் நினைவுகள், உடற் செயற்பாடுகள் போன்றவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் குறித்த அனுபவங்களை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துகொள்கிறார் டாக்டர் ஜில் டெய்லர்.
