விளையாட்டு
பள்ளிக் குழந்தைகளை வேலை வாங்குதல்
இன்று ட்விட்டர் வழியே இந்து நாளிதழில் வந்த இந்தச் செய்தி கிடைத்தது. மாநகராட்சிப் பள்ளிக் குழந்தைகளை பள்ளியைச் சுத்தம் செய்யச் சொன்னதாகவும் இது மாபெரும் தவறென்றும் உடனடியாக இது தடுத்து நிறுத்தப்படும் என்று செய்தி சொல்கிறது.
அருள்செல்வன் சொல்வதுபோல பள்ளிச் சிறுவர்களை துப்புரவில் ஈடுபடுத்துவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தம்மையும் தாம் சார்ந்திருக்கும் சூழலையும் துப்புரவாக வைத்துக் கொள்ள குழந்தைகளுகுக்குக் கற்றுக் கொடுப்பது எந்தவகையில் தவறாகிறது என்று தெரியவில்லை. நான் சிறுவயதில் படித்த ஒரத்தநாடு [...]
IPL – இன்றைய தேவைகள்
இன்னும் சில மணி நேரங்களில் ஐபிஎல்-லின் இரண்டாவது வருட ஏலம் துவங்கவிருக்கிறது. இந்த நிலையில் என்னுடைய கணிப்பில் எந்த அணி யாரைக் குறிவைக்கும் என்று எழுதுகிறேன். இதில் எவ்வளவு மெய்ப்படுகிறது என்று பார்க்கலாம். சென்ற வருடத்தில் கடைசி இடம் பெற்ற அணியிலிருந்து வெற்றி பெற்ற ராஜஸ்தானுக்கு வரலாம்.
தொழில்முறை கிரிக்கெட்
கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் இன்றைய தினம் ஒரு முக்கிய மைல்கல் என்று சொல்லலாம். நாளதுவரை நாடுகளுக்கிடையேயாக மட்டுமே இருந்துவந்த இந்த விளையாட்டு இன்றைய தினம் தன்னுடைய போலி வர்த்தகப் போர்வையை உதறிவிட்டு நிஜ வர்த்தகப் போர்வையைப் பூண்டிருக்கிறத்து. முதன் முறையாக கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து விளையாட்டுகளைப் போல கிரிக்கெட்டும் தனிநபர் வர்த்தகத்தைத் தழுவியிருக்கிறது. என்னைப் பொருத்தவரை இதை ஒரு தவிர்க்கமுடியாத, அதேசமயத்தில் அத்தியாவசியமான பரிணாம வளர்ச்சியாகத்தான் கருதுகிறேன். பல நாடுகளைச் [...]
கிரிக்கெட்டைக் கடவுள் காப்பாற்றுவாராக
ஹர்பஜன் நிறவெறி விவகாரத்தின் முழுவிபரத்தில்
[14] Mr Symonds appears to be saying that he finds it unacceptable that an opponent makes a gesture that recognises the skill of one of his own team mates. In the transcript he stated:
“MR MANOHAR: You had any objection to that patting on the back?
MR SYMONDS: [...]
ஸைமண்ட்ஸ் குரங்குதான்; ஹர்பஜன் நிறவெறியாளர் இல்லை
ஒரு வழியாக ஹர்பஜன் விவகாரம் (தற்காலிக) முடிவுக்கு வந்திருக்கிறது.
கூடுதல் சாட்சியங்களும் ஆதாரங்களும் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சொல்லி நீதிபதி விசாரனைக்கு முன்னால் கொஞ்சம் சூடு கிளப்பிவிட்டார். ஆனால் அவரைப் பார்ப்பதற்கு முன்னாலே இந்தியர்களும் ஆஸ்திரேலியர்களும் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஏற்கனவே சொல்லிவைத்தபடி ஹர்பஜன் குரங்கு என்று சொன்னது உண்மைதான் அதற்காக இரண்டரை நாள் சம்பளத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒத்துக்கொண்டுவிட்டார். ஆஸ்திரேலியர்களும் “ஆமாம் நாங்கதான் அவரைக் குரங்குன்னு சொல்லத் தூண்டினோம்” என்றும் [...]
லெகோ-வுக்கு ஐம்பது வயது
பல அதியற்புத கண்டுபிடிப்புகள் அமைப்பில் எளிமையானவை. இதற்கு முதன்மை உதாரணமாக நான் அடிக்கடிச் சொல்வது பேப்பர் கிளிப். ஒரு வெற்று கம்பியை எடுத்து சில முறை வளைத்துச் செய்யப்படுவது கிளிப். ஆனால் இன்றைய தினம் உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான அலுவலகங்களிலும், பள்ளிகளிலும், வீடுகளிலும் பயனில் இருக்கும் ஒரு சாதனம் கிளிப். இதைப் போல விளையாட்டு சாமான்களில் முதன்மை உதாரணமாக நான் கருதுவது லெகோ கட்டைகள். அமைப்பில் மிக எளிமையானது, ஆனால் உலகெங்கிலும் [...]
ஸ்ரீசந்த் – அபத்தத்தின் உச்சம்
இந்த அபத்தத்திற்கு யாராவது முடிவு கட்டினால் தேவலாம்.
“I love the spotlight. The Aussies should be worried I am coming.” Meet the quote-a-minute, bold and brash Sreesanth. He even refers to himself in the third person. “Sreesanth’s way is to be aggressive. Sreesanth will always remain Sreesanth.”
கிரிக்கெட் – நடுவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டிய நேரம்
இந்திய -ஆஸ்திரேலிய சிட்னி டெஸ்ட் போட்டி அபத்தத்தின் உச்சகட்டமாக நடந்து முடிந்து கூச்சல்கள் தணிந்திருக்கும் வேளை. இது குறித்த என்னுடைய முந்தைய பதிவில் நடுவர் ஸ்டீவ் பக்னர் நீக்கப்பட வேண்டும் என்று சொல்லியிருந்தேன். பத்ரி இதைப்பற்றி எழுதும்பொழுது
நடுவர்மீது புகார் கொடுக்கலாம். ஆனால் அவர் அடுத்த ஆட்டத்தில் இருக்கக்கூடாது, இல்லாவிட்டால் நான் மூட்டையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவேன் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.
என்று சொல்லியிருக்கிறார். தொடர்ந்து என் முந்தைய பதிவின் கருத்துப்பகுதியில் பத்ரி இதையே வலியுறுத்தி;
ஓர் [...]
ரிக்கி பாண்டிங் நீக்கப்பட வேண்டும் – பீட்டர் ரோபக்
இதைவிட யாரும் நேரடியாகச் சொல்ல முடியாது. இந்த வார்த்தைகள் பீட்டர் ரோபக்கிடமிருந்து ஸிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளிதழில் வெளியாகியிருக்கின்றன. ரோபக் தன் கருத்துரையை இப்படித் துவங்குகிறார்.
RICKY PONTING must be sacked as captain of the Australian cricket team. If Cricket Australia cares a fig for the tattered reputation of our national team in our national sport, it will not for a [...]
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடலாமா? – டெலிகிராஃப்
இன்றைய டெலிகிராஃப் நாளிதழில் அதன் அயல்நாட்டு முகவர் பீட்டர் ஃபாஸ்டர் இலங்கை அரசு தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது அந்நாட்டில் இங்கிலாந்தின் அணி விளையாடுவது நியாயமா என்று கேட்கிறார்.
The Japanese (major Sri Lankan donors), the Europeans, the UN and the US have all tried to pressure the Sri Lankans into more transparency but – given what’s happening on the Islamist front [...]











