• கனடா

    2011-சுந்தர ராமசாமி விருது பரிந்துரைக்கான அழைப்பு

    by  • January 30, 2011 • கனடா, சமூகம் • 7 Comments

    தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது – பரிந்துரைக்கான அழைப்பு தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். [...]

    Read more →

    செழியனின் வானத்தைப் பிளந்த கதை புத்தக வெளியீடு

    by  • November 19, 2010 • கனடா • 0 Comments

    சுடர் ஏந்திய தொடர் ஓட்டம்! ‘காலம்’ இலக்கிய நிகழ்வு: 20 ஆம் நூற்றாண்டில் தமிழ்! சிறப்புப் பேச்சு:   பேராசிரியர் ஏ. ஆர். வேங்கடாசலபதி (Professor Madras Institute of Development Studies Associate Fellow, South Asia Initiative Coordinate Researcher, Harvard-Yenching Institute Harvard University). புத்தக வெளியீடு :‘வானத்தைப் பிளந்த கதை’ – செழியன் இலங்கையில் நடந்த பல உண்மைச் சம்பவங்களையும் சித்தரிக்கின்றது. சிறப்பிதழ் வெளியீடு : ‘காலம் 36′ மு.பொ. சிறப்பிதழ் காலம்: [...]

    Read more →

    2010க்கான தமிழ்க் கணிமை சுந்தர ராமசாமி விருது : அழைப்பு

    by  • March 31, 2010 • அறிவிப்புகள், அறிவியல்/நுட்பம், கனடா • 0 Comments

    தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார். 2010 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான [...]

    Read more →

    அ. முத்துலிங்கம் : ஐம்பதாண்டு இலக்கிய பணி

    by  • May 16, 2009 • இலக்கியம், கனடா • 2 Comments

    அங்கதம் ஆறாத கதைச்சொல்லலுக்கு ஐம்பதாண்டுகள் அ. முத்துலிங்கம் எனும் அங்கதம் ஆறாத கதையின் ஐம்பதாண்டுகள் இலக்கிய பணி – ஒரு நிகழ்வு காலம் – 23 மே 2009, பிற்பகல் 5 முதல் 7 வரை இடம் – Munk Centre, 1 Davenshire Place, University of Toronto சிறப்புப் பேச்சாளர் – கருணாகர மூர்த்தி (எழுத்தாளர், ஜெர்மனி) சிறப்பு விருந்தினர் – எம். ஏ. நுஃமான் (தமிழ்த் துறை தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்) வாழும் [...]

    Read more →

    டொராண்டோ முக்கிய நெடுஞ்சாலையை ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பு

    by  • May 10, 2009 • கனடா, சமூகம் • 1 Comment

    இன்று மாலை டொரண்டோ நகரின் அதிமுக்கியமான கார்டினர் எக்ஸ்பிரஸ்வேயில் ஈழத் தமிழ் ஆதரவாளர்கள் நுழைந்திருக்கிறார்கள். மாலை ஏழு மணியளவில் நகர மையத்திலிருக்கும் இந்த நெடுஞ்சாலையில் குழந்தைகள் முதியோர்களுடன் ஆதரவாளர்கள் நுழைய போக்குவரத்து பாதிக்கப்பட்டு நகரில் பெரும் அமளி நிலவுகிறது. சற்றுமுன் நகரின் போலீஸ் கமிஷனர் பில் ப்ளேயர் எந்தவிதமான சக்தியையும் பிரயோகித்து அவர்களை அகற்றத் தயாராகிவருவதாகச் சொல்கிறார். நான் கேள்விப்படும்வரை நகரில் பொதுமக்கள் பலரும் இதனால் அதிக எரிச்சலடைந்திருப்பதாகத்தான் தெரிகிறது. இது திட்டமிடாமல் தன்னிகழ்வாக நடத்திருப்பதாகச் சொல்கிறார்கள். [...]

    Read more →

    அறிவியல் திருவிழா

    by  • May 10, 2009 • அறிவியல்/நுட்பம், கனடா, கல்வி • 0 Comments

    நேற்று டொராண்டோ நகர் முழுவதிலும் அறிவியல் திருவிழா நடந்தது. Science Rendezvous என்று பெயரிடப்பட்ட இந்த விழாவுக்கு இது இரண்டாம் ஆண்டு. சென்ற வருடம் இதே நாளில் நான் துருக்கி செல்ல நேர்ந்ததால் விழாவில் ஒரு மணிநேரம்தான் செலவிட முடிந்தது, நேற்று நாள் முழுவதும் பையன்களுடனும் மனைவியுடனும் முழுவதுமாகக் களிக்க முடிந்தது.

    Read more →

    இலங்கை விவகாரத்தில் கனடா தலையிட வேண்டும் – பாப் ரே

    by  • February 4, 2009 • கனடா, சமூகம் • 0 Comments

    சில நாட்களுக்கு முன்பு டொராண்டோ நகரில் அதிகரித்து வரும் தமிழர் கவன ஈர்ப்புப் போராட்டங்களும் அதனூடாக அதிகரித்து வரும் ஊடக கவனிப்பையும் குறித்து எழுதியிருந்தேன். அதில் ஒண்டாரியோவின் முன்னாள் முதல்வர் பாப் ரே குறித்த சில வரிகளை எழுதியிருந்தேன். இன்றைய டொராண்டோ ஸ்டார் நாளிதழில் பாப் ரே தனது கருத்துகளை எழுதியிருக்கிறார். கட்டுரையின் துவக்கத்தில்; The tens of thousands of deaths, towns and villages destroyed and hundreds of thousands of people [...]

    Read more →

    டொராண்டோவில் தமிழர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

    by  • January 31, 2009 • கனடா, சமூகம் • 1 Comment

    கடந்த சில தினங்களாக வலுவாக எழும்பிவரும் தமிழர்கள் குரல் ஈழத்தின் சமீபத்திய அவலத்தை நோக்கி கனேடியர்களின் கவனத்தைத் திருப்பி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக நேற்று டொராண்டோ நடுநகர் மையத்தின் யூனியன் இரயில்நிலைய வாசலலில் தொடங்கி யுனிவர்ஸிட்டி அவென்யு, டொராண்டோவின் அதிமுக்கிய யங் வீதிகளில் 45,000 பேர் மனிதச் சங்கிலி அமைத்து கனேடிய அரசை ஈழத்தின்பால் கவனத்தைத் திருப்பப் போராட்டம் நடத்தினார்கள். வெள்ளிக்கிழமை மாலைகளில் இந்தத் தெருக்களும், இரயில் நிலையமும் மிகவும் பரபரப்பாக இருக்கக்கூடியவை; அலுவல் முடிந்து [...]

    Read more →

    ஈழத்து நிலைகுறித்த இன்றைய டொராண்டோ ஸ்டார் தலையங்கம்

    by  • January 30, 2009 • கனடா, சமூகம் • 1 Comment

    ஒரு வழியாக கனடாவின் கவனம் இலங்கை அவலங்களின்மீது திரும்பத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை. கடந்த அக்டோபர் மத்தியில் கனடாவில் தேர்தல் நடந்தது.  சிறுபான்மை கன்ஸர்வேட்டிவ் ஆட்சி சற்றே பலங்கூடிய சிறுபான்மையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதே சமயத்தில் உலகெங்கும் சந்தைகள் சரியத் தொடங்க சிக்கனத்தை முன்வைக்கிறோம் என்ற போர்வையில் எதிர்க்கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுவந்த அரசு மானியத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்தார்கள். உடனடியாக மற்ற எதிர்க்கட்சிகள் மூன்றும் ஒன்றிணைந்து ஆட்சியைப் பிடிக்க முயன்றன.  இவை [...]

    Read more →

    நிழற்படப் போட்டி – விருது

    by  • March 12, 2008 • அறிவிப்புகள், கனடா, பொது • 21 Comments

    ஒரு இனிமையான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி. என்னுடைய இரண்டு நிழற்படங்கள் சென்ற வாரம் இங்கே Toronto Royal Botanical Garden – ல் நடைபெற்ற வருடாந்திர ஆர்க்கிட் விழாவில் முதலாவது மற்றும் மூன்றாவது பரிசுகளைப் பெற்றன. ராயல் பொட்டானிக்கல் கார்டன் வருடந்தோறும் குளிர்காலத்தின் இறுதியில் இரண்டு நாட்களுக்கு இந்த விழாவை நடத்துகிறது. விழாவில் கிட்டத்தட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்க்கிட் செடிகள் இடம்பெறுகின்றன. ஆர்க்கிட்களின் பல பிரிவுகளுக்கும் தனித்தனி பரிசுகள் உண்டு. போட்டியின் மறுபுறத்தில் நிழற்படங்களைத் தவிர [...]

    Read more →