• இலக்கியம்

    மடல் இலக்கியம்.

    by  • October 4, 2003 • இலக்கியம் • 0 Comments

    மடல் இலக்கியத்தைப்பற்றி நண்பர் பத்ரி வலைக்குறித்திருக்கிறார் . தமிழ் செவ்விலக்கியத்தில் மடல் இலக்கியம் ஒரு முக்கிய கூறு. நிறைவேறாத காதலுக்கு கடைசி முயற்சியாக மடலேற்றம் நடந்திருக்கிறது. மடலேறுவேன் என்று பயமுறுத்துவது வரை அகத்திணையாகக் கருதப்படும்.

    Read more →

    என் மூக்கு – டக்ளஸ் ஆடம்ஸ்

    by  • September 9, 2003 • இலக்கியம் • 0 Comments

    இன்றைக்கு கூகிளின் ஐந்தாவது பிறந்த நாள். இது தெரியாமல் கடந்த நான்கு நாட்களாக நான் கூகிளைப் பற்றி வலைப்பதிந்திருக்கிறேன். வாழ்த்துக்கள்!! * * * என் மூக்கு டக்ளஸ் ஆடம்ஸ் என்னுடைய அம்மாவிற்கு நீளமூக்கு, என்னுடைய அப்பாவிற்கு அகலமூக்கு. நான் இரண்டையும் ஒருசேரப் பெற்றுக்கொண்டேன். இது பெரியது. எனக்குத் தெரிந்தவரையில் இதை விடப் பெரிய மூக்கு கொண்ட ஒரே ஆள் என்னுடைய பள்ளியின் மாஸ்டர்; மிகச்சிறு கண்களையும், இல்லாததுபோல் தோற்றமளிக்கும் சிறிய தாடையையும் கொண்ட, கேவலமான ஒல்லிக் [...]

    Read more →

    காலம் இதழ் – 18 (தொடர்ச்சி)

    by  • August 20, 2003 • இலக்கியம் • 2 Comments

    {இதன் முதல் பாகம்} இந்த நேர்காணலில் பல விநோதக் கருத்துகளும் தென்படுகின்றன. உதாரணமாக, {மேற்கோள்} கேள்வி: உலகமயமாக்கல் என்பது தவிர்க்கமுடியாததே என சில மேலைதேய அறிஞர்கள் கருதுகிறார்கள். … இதிலே உலகமயமாக்கல் மூலம் தலித்துகள் பொருளுற்பத்தியில் நேரடியாகப் பங்கு கொண்டு ஓரளவு பொருளியல் முன்னேற்றத்தைச் சாத்தியப்படுத்தலாம் என்றும் சில தலித் அறிஞர்கள் கூறுகிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில்: நான் ‘டங்கல் என்னும் நயவஞ்சகம் என்றொரு சிறு நூலை வெளியிட்டுள்ளேன். … இந்தியாவினுள்ளே கணிப்பொறி [...]

    Read more →

    காலம் – இதழ் 18

    by  • August 19, 2003 • இலக்கியம் • 0 Comments

    கனடாவிலிருந்து வெளிவரும் காலாண்டிதழான காலம் இதழ் 18 இவ்வாரம் படிக்கக் கிடைத்தது. இதுநாள் வரை எந்தவொரு நிலைகளையும் சாராமல் வெளிவந்து கொண்டிருந்த காலம் இவ்விதழில் சறுக்கியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இரண்டு படைப்புகளை முன் வைத்தே நான் இப்படிக் கூற வேண்டியிருக்கிறது. முதலாவது, பேராசிரியர் தொ. பரமசிவனுடனான ஷோபாசக்தியின் நேர்முகம். இரண்டாவது சிவத்தம்பி அவர்கட்குப் பணிவான வேண்டுகோள் என்று தலைப்பிடப்பட்ட வரனின் கடிதக் கட்டுரை. பின்னது, சிவத்தம்பியின் ‘நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம் என்ற புத்தகத்தில் தவறுகள் மலிந்துள்ளதாகவும் அதனை அவர் விற்பனையிலிருந்துத் [...]

    Read more →

    நாஞ்சில் நாடனின் மண்ணுள்

    by  • August 13, 2003 • இலக்கியம் • 0 Comments

    சில நாட்களுக்கு முன்னால்தான் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் முதல் கவிதைத் தொகுப்பான மண்ணுள்ளிப் பாம்பு வாசித்தேன். என்பிலதனை வெயில்காயும், சதுரங்கக் குதிரை, எட்டுத்திக்கும் மதயானை போன்ற கதைகளினால் தற்கால இலக்கியத்தில் தனியிடம் பெற்றவர் நாடன்.

    Read more →

    கலிங்கத்துப்பரணி

    by  • August 8, 2003 • இலக்கியம் • 3 Comments

    கவிச்சக்ரவர்த்தி என்று புகழ் பெற்ற சயங்கொண்டார் உண்மையிலேயே முடிசூடா அரசர்தான். கலிங்கத்துப் பரணியின் பாடல்கள் எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை. பொரிந்த காரை கரிந்த சூரை புகைந்த வீரை எரிந்தவேய் உரிந்த பாரை எரிந்த பாலை உலர்ந்த ஓமை கலந்தவே உதிர்ந்த வெள்ளில் ஒடுங்கு நெல்லி உணங்கு தும்பை உலர்ந்தவேல் பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ளி பிளந்த கள்ளி பரந்தவே வற்றல் வாகை வறந்த கூகை மடிந்த தேறு பொடிந்தவேல் முற்ற லீகை முளிந்த விண்டு முரிந்த [...]

    Read more →

    கவிஞர் மாலதி மைத்ரி

    by  • July 24, 2003 • இலக்கியம் • 0 Comments

    சமீபத்தில் கவிஞர் மாலதி மைத்ரியின் சங்கராபரணி எனும் கவிதைத் தொகுப்பு படிக்கக் கிடைத்தது. இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. இன்னும் நிறைய எதிர்பார்க்கத் தூண்டுகிறது. தொகுதியில் என்னைக் கவர்ந்த கவிதைகளில் ஒன்று; சங்கராபணி – மாலதி மைத்ரி அதனதன் உலகம் நினைவுகளை கொத்திக் கொத்தி தோண்டி எடுக்கப்பட்ட புழுவாய் மரங்கொத்தியின் அலகில் சிக்கித் தவித்து சிறு காற்று கிளை அசைக்க பிடிநழுவி பட்டாம் பூச்சியாய் திசைவிலகும் நீ தழும்பாய் வளர்கிறது மரம் இரை ஏமாற்றிய பசியுடன் [...]

    Read more →