இலக்கியம்

மெல்லிடை - காலத்தால் அழியா அழகியல்

சமீபத்திய Proceedings of the Royal Society B சஞ்சிகையில் காலம் காலமாக உலகத்தின் பல காலாச்சாரத்தைச் சார்ந்த இலக்கியங்களிலும் மெல்லிடையில் அழகு போற்றப்பட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பெண்ணுடல் சார்ந்த அழகியலில் மெல்லிய இடை உலகம் முழுவதும், எல்லா காலங்களிலும் மாறத ஒரு விடயமாகவே இருந்து வருகிறது. மெல்லிதழ்/தடித்த உதடுகள், வெண்ணிறமேனி/பொலிகருமை, கதுப்பு அல்லது வடிந்த கன்னங்கள், சிறிய/பெரிய கண்கள் என்று காலத்தாலும் கலாச்சாரத்தாலும் அழகியல் வரையறைகள் மாறிக்கொண்டேயிருக்க, மாறாதிருப்பது மெல்லிடை என்று அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.


மதுரைத் திட்டம் கல்யாணசுந்தரம் டொராண்டோ வருகிறார்

மதுரைத் திட்டத்தின் தலைவர் முனைவர் கல்யாணசுந்தரம் ஜுலை முதல் வாரத்தில் டொராண்டோ வரவிருக்கிறார். இவரது வருகையையொட்டி டொராண்டோ தமிழ் கழகத்தின் (MACA) இலக்கியக்குழு ஒரு விசேட நிகழ்வை ஒழுங்கைமக்கவிருக்கிறது ஒழுங்கமைக்கவிருக்கிறது. இது ஜூலை 8ம் தேதி நடைபெறவிருக்கிறது. இடம், காலம் முடிவானபின் அறியத் தருகிறேன். மதுரைத் திட்டம், தமிழிலக்கியம், தமிழ் கணிமை இவற்றில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ள விழைகிறேன்.
1998-ல் அதிகாரபூர்வமாக மதுரைத் திட்டம் துவக்கப்படுமுன்னரே கல்யாண் இதையொட்டிய வேலைகளில் ஈடுபட்டிருந்தார். 1995-ல் நான் ஸ்காட்லாந்தில் வசித்தபொழுது [...]


உயிர்நிழல் கலைச்செல்வன் நினைவு-கூடல்

நேற்றுதான் கேள்விப்பட்டதைப் போல இருக்கிறது.  உயிர்நிழல் கலைச்செல்வன் மறைந்து பதின்மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன.   அவரை நினைவுகூறும் வகையில் டொராண்டோ நண்பர்கள் ஒழுங்கமைத்திருக்கும் கூட்டத்தின் விபரங்கள்;
இடம் : Mid Scarborough Community Centre,  2467 Eglington Ave E (Near Kennedy Subway)
காலம்:   ஏப்ரில் 08, 2006.  சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணி
நிகழ்ச்சிகள்
கனடா பழங்குடி மக்களின் வாழ்வும் வளமும்,   Simon Ortz, பூர்வகுடி பேச்சாளர்/கவி
நினைவு கூரல் - சுசீந்திரன் (ஜெர்மனி)
நினைவுப் பேருரை -  Andrew Brower, Jackman  [...]


அஞ்சலி : ஸ்டானிஸ்லா லெம்

அறிவியல் புனைகதைகள் என்றால் உஷ்… உஷ் என்று க்ராஃப்ட்வெர்க்கைப் பார்த்து சூடுபோட்டுக்கொண்ட அமானுஷ்ய சத்தங்களுடன் தலையின் கொம்பு அல்லது கவிழ்த்து வைக்கப்பட்ட சொம்பு போன்று விசித்திரமான உடையலங்காரங்களுடன் வௌவால்களைத் தொடும் கீச்சுக்குரலில் பேசுவது, மரமுருகி மனிதனாவது அல்லது மயிர்வளர்ந்து பாம்பாவது போன்ற அதிநுட்ப விட்டலாச்சார்யாவின் மறுவடிவம் என்றுதான் நம்மில் பலருக்கும் தெரியும்.
உண்மையான அறிவியல் புனைகதைகள் மானிடத்தின் இருப்பையும் சிந்தனை எல்லைகளையும் குறித்த கேள்விகளைக் கேட்பன. பிரபஞ்சத்தில் நம்மிடத்தையும் நாமும் பிரபஞ்சமும் [...]


மதுரைத் திட்டத்தில் நவீன இலக்கியங்களை உள்ளிட உதவுங்கள்

இதுநாள்வரை மதுரைத்திட்டத்தில் தன்னார்வலர்களால் தட்டச்சு செய்யப்பட்டு, மெய்ப்புர் பார்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பவனவற்றுள் பெரும்பான்மை செவ்வியல் இலக்கியங்களே. செவ்வியல் இலக்கியங்களை மின்வடிவில் எல்லோருக்கும் எளிதாக, இலவசமாகக் கிடைக்கச் செய்வதில் மதுரைத் திட்டத்தின் பங்கு அற்புதமானது.
இத் திட்டத்திற்கு தட்டசு செய்ய, மெய்ப்புப் பார்க்க உதவுவதில் ஒரு முக்கியமான மகிழ்ச்சி, அதே சமயத்தில் அந்த நூல்களையும் நம்மால் ஆழ்ந்து படிக்க முடியும். மதுரைத் திட்டத்தின் நல்ல நோக்கங்களில் ஆர்வமுள்ள சிலர் செவ்வியல் இலக்கியங்கள் என்றவுடன் [...]


டொராண்டோவில் கீழ்வெண்மணி குறித்த ஆவணப்படம்

பாரதி கிருஷ்ணகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த ‘ராமய்யாவின் குடிசை’ என்ற ஆவணப்படம் டொராண்டோ நகரில் காலம் சிற்றிதழால் திரையிடப்படுகிறது. தமிழக வரலாற்றில் படிந்த துயர சம்பவமான கீழ்வெண்மணி கொலைகள் குறித்த பல சரித்திர உண்மைகளை வெளிக்கொணரும் இந்த ஆவணப்படம் மிகவும் முக்கியமானது. 36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாதிக்கொடுமை கொலைகளின் பின்னணியையும் கோரத்தையும் 64 சாட்சியங்கள், மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் மூலம் பாரதி கிருஷ்ணகுமார் திறமையாக தெளிவுபடுத்தியிருப்பதாக இந்த ஆவணத்தைக் குறித்த [...]


இவ்வருட இயல் விருது : பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்

கனடா இலக்கியத் தோட்டம் அமைப்பும் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியப் பிரிவும் இணைந்து வழங்கு வருடாந்திர இயல் விருது இந்த முறை அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (Prof. George L. Hart) அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜோர்ஜ் எல்.ஹார்ட் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்துறை உட்பட நான்கு தலைமைப் பீடங்களை அலங்கரிக்கும் இவர் ஆரம்பத்தில் விஸ்கான்சின் (மாடிஸன்) பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக கடமையாற்றியவர். இவருக்கு லத்தீன், [...]


புத்தக அறிமுகம் - நரிக்குறவர் இனவரைவியல்

(நரிக்குறவர் இனவரைவியல், கரசூர் பத்மபாரதி, முதல் பதிப்பு, டிசம்பர் 2004, தமிழினி, சென்னை -14, விலை ரூபாய் 160)
தமிழில் இனவரைவியல் (ethnography) நூல்கள் அதிகம் வெளிவருவதில்லை (பொதுவில் சமூகவியல் நூல்கள் தமிழில் பதிப்பிக்கப்படுதல் மிகக் குறைவு), இந்த நிலையில் செல்வி பத்மபாரதியின் புதுச்சேரி பல்கலைக்கழக பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையை முழு இனவரைவியல் நூலாகப் பதிப்பித்திருப்பது முதலாகப் பாரட்டப்பட வேண்டிய காரியம். தொல்குடியினரான நரிக்குறவர்கள் வேளாண் கலாச்சாரத்திற்கு முந்துபட்ட வேட்டைக் கலாச்சாரத்தை அடியொற்றி வாழ்பவர்கள். [...]


டொராண்டோவில் சுந்தர ராமசாமி நினைவாஞ்சலிக் கூட்டம்

மதிப்புக்குரிய எழுத்தாளர் திரு சுந்தர ராமசாமி கடந்த வெள்ளிக்கிழமை, 14 ஒக்டோபர் 05 அன்று அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் பசிபிக் நேரம் பின்மதியம் 1.35 க்கு காலமானார்.
அவரை நினைவுகொள்ளும் முகமாக கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஏற்பாடு செய்திருக்கும் அஞ்சலிக் கூட்டம் வரும் ஞாயிறு அன்று நடைபெறும்.

இடம்: 2543, Pharmacy Avenue ( Finch/Pharmacy) - Near Daily Needs Supermarket.
தேதி: ஒக்டோபர் 23, 2005
நேரம்: மாலை 6.00 மணி

எழுத்தாளர்கள், வாசகர்கள், நண்பர்கள், அனுதாபிகள் அனைவரும் [...]


அஞ்சலி : சுந்தர ராமசாமி (1931-2005)

சுந்தர ராமசாமியை நான் முதலில் வாசித்தது க்ரியாவின் வெளியீடாக வந்த “சுந்தர ராமசாமி சிறுகதைகள்” புத்தகத்தின் வாயிலாகத்தான். அதற்கு முன் இந்தப் பெயரை கேள்விப்பட்டவனல்லன். எதேச்சையாகக் கையில் கிடைத்தது இந்த நூல். இதிலிருந்த சிறுகதைகள் பல வித்தியாசமாக இருந்தன. பெரிதான அலங்கார ஜோடனைகள் இல்லாத ஆனால் அதே சமயத்தில் அதி துல்லியமான எழுத்து நடை என்னைக் கவர்ந்திழுத்தது. அந்தக் காலங்களில் நான் பல முன்னணி [...]