இலக்கியம்

அ. முத்துலிங்கம் : ஐம்பதாண்டு இலக்கிய பணி

அங்கதம் ஆறாத கதைச்சொல்லலுக்கு ஐம்பதாண்டுகள்
அ. முத்துலிங்கம் எனும் அங்கதம் ஆறாத கதையின் ஐம்பதாண்டுகள் இலக்கிய பணி – ஒரு நிகழ்வு
காலம் – 23 மே 2009, பிற்பகல் 5 முதல் 7 வரை
இடம் – Munk Centre, 1 Davenshire Place, University of Toronto
சிறப்புப் பேச்சாளர் – கருணாகர மூர்த்தி (எழுத்தாளர், ஜெர்மனி)
சிறப்பு விருந்தினர் – எம். ஏ. நுஃமான் (தமிழ்த் துறை தலைவர், பேராதனை பல்கலைக்கழகம்)
வாழும் தமிழ் புத்தகங்களின் கண்காட்சியும் இடம்பெறும் (நண்பகல் முதல் [...]


Love Marriage – V.V. Ganeshananthan

ஒவ்வொரு குடும்பமும் திருமணத்தில் துவங்குகிறது; ஒவ்வொரு திருமணமும் குடும்பத்திலிருந்து.  வாசுகி கணேசானந்தனின் Love Marriage குடும்பங்களைத் திருமணங்கள் வழியே ஆராய்கிறது.  இருபத்தியொரு வயதாகும் யாழினி ஈழத்துப் பெற்றோர்களுக்கு அமெரிக்காவில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறை அமெரிக்கப் பெண். யாழினியின் எண்ணவோட்டங்களாகக் கதை நகர்த்தப்படுகிறது. படிப்பின் இடையே தன்னுடைய பெற்றோர்களின் வார்த்தைக்கு இணங்க யாழினி கனடாவின் டொராண்டோ நகருக்கு வருகிறார்.  இலங்கையிலிருந்து தன் அந்திமக் காலத்தைக் கழிக்க வரும் அவருடைய மாமாவைப் பராமரிக்கும் பொறுப்பைப் பெற்றோர்களுடன் இணைந்து [...]


வலையும் படைப்புச் சாத்தியங்களும்

எல்லா சராசரி நிரல் எழுதும் இளைஞர்களைப் போலத்தான் ஸ்ரீகாந்த் தேவராஜனும் அமெரிக்கா வந்தார். மினியாபோலிஸ் அவரை இருபது அங்குலப் பனிப்பொழிவுடன் அன்புடன் வரவேற்றது. பகலில் நிரலெழுதும் வேலையில் சளைத்துப் போன ஸ்ரீகாந்த்-க்கு இரவு நேர அடைக்கலம் கீபோர்ட். விரைவில் இணையம் வழியே அவரைப் போல ஆர்வம் இந்திய மென்கலன் நண்பர்களுடன் சேர்ந்து தனிப்பாடல்களை வெளியிட்டார். இதில் முக்கியமான விஷயம் திரையிசையை ஒத்த பாடல்களை உருவாக்குவதற்கு பல பேர் ஒன்று சேர வேண்டியிருக்கிறது; பாடலாசிரியர், [...]


வலைப்பதிவுகள் செயற்படும் விதம் – 2 (அல்லது) எசப்பாட்டுக் கலாச்சாரம்

முதல் பகுதி
மனித வரலாற்றின் காலகட்டத்தில் மொழி, கலைகள், அறிவியல் இன்னபிற அறிவுசார் துறைகளின் வளர்ச்சி அதிவிரைவாக இருந்தவை தடைகளின்றி கருத்துப்பரிமாற்றம் நடந்த நாட்கள்தாம். ஒற்றை ஓடையாக அறிவு எப்பொழுதும் ஒழுகியதில்லை. அறிஞர்கள் உலகில் கருத்தரங்கம், குழு விவாதம் என்பவை அறிவுப் பெருக்கத்தை விரைவுபடுத்தும் ஊக்கிகளாகச் செயல்படுவதை மனித வரலாற்றின் நெடுகிலும் காணமுடியும். மறுபுறம் சராசரி மனிதர்களின் திண்ணை கூடிப் பேசல், டீக்கடை அரட்டைகள் என்று உலகியல் நெருக்கடிக்களுக்கு இடையில் கணநேரக் கருத்துப் பரிமாறல் நடப்பதைக் [...]


வலைப்பதிவுகள் செயல்படும் விதம் – 1

தமிழில் வலைப்பதிவுகள் தோன்றி ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டன. இப்பொழுது இப்படி ஒரு தலைப்பிட்டு ஒன்றை எழுதுவதன் அபத்தம் தெரிகிறது. மறுபுறத்தில் சென்ற இரண்டு வாரத்தில் பிரபு ராஜதுரை பதிவு மற்றும் என் பதிவில் அச்சு ஊடகம், மின்னூடகம், இவை செயல்படும் விதங்கள் குறித்த கருத்துப் பரிமாறல்களைத் தொகுத்து இப்படியொன்றை எழுதினால் பாவமில்லை என்றுதான் தோன்றுகிறது.
முன்னதாக – இது வலைப்பதிவுகள் செயற்பாட்டைக் குறித்த மதிப்பீடோ விமர்சனமோ இல்லை. வெறும் நுட்ப ரீதியான என் புரிதல்களைத் தொகுத்து எழுதுவதே [...]


புத்தக விமர்சனம் : The Indian Clerk

இப்படியெல்லாம் கணிதச் சமன்பாடுகளை இடையிடையே போட்டு நாவல் என்று கையில் கொடுத்தால் படிக்க முடியுமா என்றுதான் முதலில் தோன்றியது. ஒன்றிரண்டு அறிவியல் புதினங்களைத் தவிர நான் சமன்பாடுகளைப் பெரிதும் புதினங்களில் கண்டதில்லை. டேவிட் லெவிட்டின் தி இந்தியன் க்ளர்க் நாவல் அற்புதமான புனைகளத்தைக் கொண்டது. முதலாம் உலகப் போருக்குச் சற்று முந்தைய காலத்திலிருந்து இந்தச் சரித்திர நாவல் துவங்குகிறது. சரித்திர நாவல்களில் நாம் பெரிதும் கண்டவை உண்மை நிகழ்வுகளினூடாக புனைவு மாந்தர்கள் உலவும் [...]


ஶ்ரீரங்கம் “சுஜாதா” ரெங்கராஜன்

சற்று நேரம் முன் சுஜாதா காலமான செய்தி ஒரு நண்பர் வழியாகக் கிடைத்தது; சோகமாக இருக்கிறது.
ஐந்து தலைமுறைகளுக்குக் குறைவில்லாமல் தமிழகத்து இளைஞர்களுக்கு மிகவும் பரிச்சயமான பெயர்களுள் சுஜாதா முக்கியமானதொன்றாக இருக்கும். அவருக்கு முன்பும் பின்பும் அவ்வளவு அபாரத் திறமையுடன் மொழியைக் கையாண்டவர்கள் தமிழில் மிகக் குறைவானவர்களே. இன்றைய எழுத்தாளர்களில் தொன்னூறு சதவீதத்தினரின் எழுத்துக்களில் இரண்டு பக்கங்களுள் ஒரு தடவையாவது சுஜாதா-வைக் காணமுடியும்.
என் பள்ளிப் பருவங்களில் சக தோழர்களில் சிலர் தங்களைக் கமலஹாசனாகவும் ரஜினிகாந்த் ஆகவும் [...]


மு. தளையசிங்கம் படைப்புகள் – வெளியீட்டு விழா

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கொள்ள வேண்டும். மு. தளையசிங்கத்தின் எழுத்துக்கள் மு.பொன்னம்பலத்தைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்தத் தொகுப்பு தமிழின் மைய நீரோட்டத்திலிருந்து விடுபட்டு முற்றிலும் புதிய சிந்தனையாக ஈழத்தில் கிளைத்தெழுந்த விதத்தைப் புரிந்து கொள்ள உதவும் என்று நம்பலாம். தனிப்பட்ட முறையில் நான் இதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
திரு. தளையசிங்கத்தின் சில எழுத்துக்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் நூலகம் தளத்தில் கிடைக்கின்றன.
அவரைப்பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை நண்பர் டாம். சிவதாசன் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.
இன்னொரு [...]


டொராண்டோ இலக்கியத்தோட்ட விருதுகள்

நேற்று மாலை டொராண்டோ பல்கலைக்கழகத்தின் வில்லியம் டூ அரங்கில் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2001 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த விழாவின் ஆறாவது ஆண்டு இது. இம்முறை தமிழ் இலக்கியத்திற்கான ஆயுட்கால பங்களிப்பை கௌரவிக்கும் “இயல் விருது” புகழ்பெற்ற நாடகர் ஏ.சீ. தாசீசியஸ்க்கு வழங்கப்பட்டது. ஆறு ஆண்டுகளில் டொராண்டோ இலக்கியத் தோட்டத்தின் பரப்பு அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. மகிழ்ச்சியான விஷயம்.


பேரா. சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும

புலம்பெயர் வாழ் வல்லுவெட்டித்துறை மக்களின் ஆதரவில்
காலம் சஞ்சிகையின்
பேராசிரியன்
பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு விழாவும் கருத்தரங்கும்

தலைமை பேராசிரியர் செல்வா கனகநாயகம்
சிறப்பு பேச்சாளர் வீ. அரசு (தமிழ் துறைத் தலைவர் சென்னை பல்கலைக்கழகம்)
இடம்: ஸ்காபறோ சிவிக் சென்றர், டொராண்டோ,
ஜூன் 9 2007 மாலை 5;.30

சிவத்தம்பி சிறப்பிதழாக காலம் இதழ் வெளியிடப்படும்
சிவத்தம்பி என்னும் ஆளுமை: சிறிய ஆவணப்படம் ஒலி ஒளி வடிவில்
மாலை 3 மணி தொடக்கம் வாழும் தமிழு; புத்தகக் கண்காட்சி
– [...]