Author Archive

செல்பேசிவழியே நீர் இறைத்தல்

இந்தியாவில் பல மாநிலங்களிலும் பகல் இரவு என்று பாகுபாடில்லாமல் விவசாயிகள் வயல்களுக்கு நீர் இறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.  கொடுமையான வானிலை, இருட்டினால் தவிர்க்க முடியாத விலங்கினங்கள், பாம்புகள் என்று பல கஷ்டங்கள் இவற்றுக்கிடையே  விவசாயிகள் (வயோதிகர்கள், குழந்தைகளும் அடக்கம்) வயலுக்கு பம்ப் செட்டைப் பயன்படுத்தி நீரிறைக்கச் செல்ல வேண்டியிருக்கிறது.
புனேயைச் சேர்ந்த சந்தோஷ் ஆஸ்ட்வல் கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்று இப்பொழுது பெரும் வெற்றி கண்டிருக்கிறார். ஆரம்ப காலத்தில் இரண்டு ரூபாய் அலாரம் கடிகாரங்களைப் [...]


பேராசிரியரும் துறைத்தலைவரும்

நான் பொதுவில் மின்னஞ்சலில் வரும் துணுக்குகளைப் பிறருக்கு முற்செலுத்துவதில்லை; வலைப்பதிவில் போடுவதில்லை. ஆனால், இது தவறவிடக்கூடாத விஷயமாகத் தோன்றுவதால் இங்கே;
A man in a hot air balloon realized he was lost. He reduced altitude and spotted a woman below. He descended a bit more and shouted, “Excuse me, can you help me? I promised a friend I would meet him an [...]


உடலில் பதியவைத்த கணினியை வைரஸ் தாக்கும்பொழுது

மனித உடலில் கணினி சில்லைப் பதித்தல் சில காலமாக நடந்துவருகிறது. எனக்குத் தெரிந்து எங்கள் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரும், அவரது ஆசிரியரும் தங்கள் இடது மணிக்கட்டுக்குக் கீழே சிறிய RFID   சில்லு ஒன்றைப் பதித்துக் கொண்டுள்ளார்கள். சோதனை முறையில் செய்யப்படும் இந்தப் பதிகணினியைப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர், இடையில் யாரும் தாக்கித் தகவலைத் திருடாதவகையில் செல்பேசி மூலமாக தகவல் பரிமாறிக்கொள்வதைப் பற்றிய சோதனைகளைச் செய்து வருகிறார்கள். 


அஞ்சலி – மார்ட்டின் கார்ட்னர்

புகழ்பெற்ற கணிதவியலாளர், வெகுஜன அறிவியல் எழுத்தாளர் மார்ட்டின் கார்ட்னர் (Martin Gardner) சென்ற சனிக்கிழமை, 22 மே 2010 அன்று காலமானார்.  கார்ட்னர் கிட்டத்தட்ட எழுபது புத்தகங்களை எழுதியிருக்கிறார்.  எண்ணிக்கை கடந்து அவர் புத்தகங்கள் பல காலத்தால் அழியாமல் நிலைத்திருக்கின்றன.  அறிவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை எழுதும்பொழுது காலத்தால் அழியாமல் அவை நிலைத்திருப்பது அசாத்தியமானதும், ஒரு வகையில் வருந்தத்தக்கதுமாகும். வெகுவாகத் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வரும் அறிவியலில் நேற்றைய சாதனைகள் இன்றைய சாதாரணங்கள், நாளை அவை முற்றிலுமாக மாறிப்போயிருக்கும்.  [...]


லேசருக்கு ஐம்பது வயது -2

இன்று லேசருக்கு ஐம்பதாவது பிறந்த நாள். இதையொட்டி லேசர் செய்ற்படும் விதம், பயன்பாடுகள் குறித்த ஒலி வடிவ விளக்கம். இது இரண்டாம் பகுதி.
[Audio clip: view full post to listen]


லேசருக்கு ஐம்பது வயது – 1

இன்று லேசருக்கு ஐம்பதாவது பிறந்த நாள்.  இதையொட்டி  லேசர் செய்ற்படும் விதம், பயன்பாடுகள் குறித்த ஒலி வடிவ விளக்கம். இது பகுதி ஒன்று.
[Audio clip: view full post to listen]


உலக சாம்பியன் ஆனந்துக்கு வாழ்த்துகள்


மாறிவரும் குழந்தைகள் உலகம்

சமீபத்தில் படிக்க நேர்ந்த இந்த தெகல்கா கட்டுரை அதிர்ச்சியளிக்கிறது. நம் சமூகத்தில் நாம் எதையும் வெளிப்படையாகப் பேசி விவாதிப்பதில்லை. எனவே இதை எப்படிக் கையாளப் போகிறோம் எனப் பிரமிப்பாக இருக்கிறது.
Sex, Lies & Homework – Tehelka.
Mini’s parents still don’t know how to deal with what they found out. Mini is a dainty, extremely pretty 14-year-old. When [...]


திரையிசையில் இராகங்கள் – கல்யாணி

கல்யாணி   மிகப் பிரபலமான இராகங்களுள் ஒன்று.  கர்நாடக இசையிலும், ஹிந்துஸ்தானி பாரம்பரியத்திலும் திரையிசையிலும் கல்யாணி பலராலும் மிகப் பரவலாகக் கையாளப்படுகிறது.  ஏறு, இறங்கு வரிசைகளில் ஏழு ஸ்வரங்களையும் முழுமையாகக் கொண்ட இராகங்களை மேளகர்த்தா இராகம் அல்லது ஜனன இராகம் என்று அழைப்பார்கள். நாம் சென்ற வாரம் பார்த்த மோகனம் அப்படியல்ல அது ஐந்து ஸ்வரங்களை மாத்திரமே கொண்டது.  இராகங்களின் வரிசையில் கல்யாணி 65-வது மேளகர்த்தா இராகம்.  இதன் ஏறு/இறங்கு ஸ்வர வரிசைகள்
ஆரோகணம் : ஸ ரி2 க3 [...]


2010க்கான தமிழ்க் கணிமை சுந்தர ராமசாமி விருது : அழைப்பு

தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.
2010 ஆம் ஆண்டுக்கான விருதுக்கான பரிந்துரைகள் [...]