Archive for December, 2008

இந்தியா – இதுவரை

டொராண்டோவிலிருந்து கிளம்பி சரியாக மூன்று வாரங்களாகிவிட்டன.  முதல் நான்கு நாட்கள் லண்டனில் ஓடிவிட்டன (அந்நிய லண்டனை இலண்டன் என்று இலக்கணத்தூய்மை ‘படுத்து’பவர்களை இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலலாம்). மியூசியம், கோட்டைகள் என்று ஏறி இறங்கி வெள்ளைக்காரனின் மூன்னூறு வருட கொள்ளை வரலாற்றுச் சான்றுகளை நேரில் பார்த்தாகிவிட்டது. பொறுக்கிகள் பஞ்சலோக புத்தர், ஆச்சி பாம்படம் என்று வர்ஜியா வர்ஜியமில்லாமல் திருடிக்கொண்டு போய்விட்டார்கள். பத்தமடைப் பாயைக் கூட விடாமல் சுருட்டியிருக்கிறார்கள். லண்டனைப் பற்றி விரிவாகப் பின்னர். இப்பொழுது இந்தியாவில் இதுவரை கண்ட [...]