மு. தளையசிங்கம் படைப்புகள் - வெளியீட்டு விழா
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கொள்ள வேண்டும். மு. தளையசிங்கத்தின் எழுத்துக்கள் மு.பொன்னம்பலத்தைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்தத் தொகுப்பு தமிழின் மைய நீரோட்டத்திலிருந்து விடுபட்டு முற்றிலும் புதிய சிந்தனையாக ஈழத்தில் கிளைத்தெழுந்த விதத்தைப் புரிந்து கொள்ள உதவும் என்று நம்பலாம். தனிப்பட்ட முறையில் நான் இதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
திரு. தளையசிங்கத்தின் சில எழுத்துக்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் நூலகம் தளத்தில் கிடைக்கின்றன.
அவரைப்பற்றிய ஒரு நல்ல அறிமுகத்தை நண்பர் டாம். சிவதாசன் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார்.
இன்னொரு நல்ல கட்டுரை வீரகேசரியிலிருந்து வசந்தனால் மறுபதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
மு. தளையசிங்கம் படைப்புகள் - நூல் வெளியீடு இடம்: ஸ்கார்ப்ரோ சிவிக் சென்டர்
நாள் : 26 ஜனவரி 2008,சனிக்கிழமை
நேரம் : பிற்பகல் 1:00 மணி
ஒழுங்கமைப்பு : புங்குடுதீவு, பழைய மாணவர்கள் சங்கம். டொராண்டோ, கனடா.
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.

சென்ற வார ‘வீடு’ பத்திரிகையில் -இந்த நூலின் வெளியீட்டை முன்னிட்டு- மு.தளையசிங்கம் சிறப்பிதழ் பகுதியொன்று வெளியிடப்பட்டிருப்பதும் வரவேற்கவேண்டிய ஒரு விடயம்.