ரிக்கி பாண்டிங் நீக்கப்பட வேண்டும் – பீட்டர் ரோபக்
by வெங்கட் • January 7, 2008 • விளையாட்டு • 13 Comments
இதைவிட யாரும் நேரடியாகச் சொல்ல முடியாது. இந்த வார்த்தைகள் பீட்டர் ரோபக்கிடமிருந்து ஸிட்னி மார்னிங் ஹெரால்ட் நாளிதழில் வெளியாகியிருக்கின்றன. ரோபக் தன் கருத்துரையை இப்படித் துவங்குகிறார்.
RICKY PONTING must be sacked as captain of the Australian cricket team. If Cricket Australia cares a fig for the tattered reputation of our national team in our national sport, it will not for a moment longer tolerate the sort of arrogant and abrasive conduct seen from the captain and his senior players over the past few days. Beyond comparison it was the ugliest performance put up by an Australian side for 20 years. The only surprising part of it is that the Indians have not packed their bags and gone home. There is no justice for them in this country, nor any manners.
ஆஸ்திரேலிய வாசகர்கள்கூட பீட்டர் ரோபக்-கின் கருத்தை முழுமையாக ஆதரித்திருக்கிறார்கள். (கருத்துக்கணிப்பைப் பார்க்க).
யாராவது ஒருவர் ஆஸ்திரேலியப் பூனைக்கு மணி கட்ட வேண்டும். அவர்களது பொய்யை அவர்கள் முகத்தில் அறைய வேண்டும். இப்பொழுதுகூட இந்தியா இதைச் செய்யாமல் போனால் அதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும் – வர்த்தக நிர்ப்பந்தம். இதற்குப் பதில் கிரிக்கெட் நிர்வாகத்தை பெப்ஸி, நைக்கி, அடிடாஸ், கைகளில் முழுமையாக ஒப்படைத்துவிட்டு வெளியே வந்துவிடலாம்.
* * *
ஹர்பஜன் செய்தது சரியா தவறா என்ற கேள்வி அடுத்ததாகத்தான் வருகிறது. பலருடைய கருத்துக்களையும் படித்தபிறகு என் மனதில் தோன்றியது – ஹர்பஜன் குரங்கு என்று சொல்லியிருக்கக்கூடும். இதற்கு பெரும் ஆதாரமாக நான் காண்பது அருகில் இருந்த சச்சின் நேரடியாக வெளியே வந்து ஹர்பஜன் அப்படிச் சொல்லவில்லை என்று மறுக்கவில்லை. ஹர்பஜன் சச்சினுக்கு மிகவும் நெருங்கிய நண்பர் (முதல் இன்னிங்க்ஸ் முடிவில் சச்சினின் நேர்முகத்தைப் படிக்கவும்). அப்படிச் சொல்லியிருந்தால் ஹர்பஜன் செய்த மாபெரும் தவறு ‘குரங்கு’ என்ற வார்த்தைதான். இதற்குப் பதிலாக நாய், பன்றி, நரி என்று சொல்லியிருந்தால் (லும் கூட) ஆஸ்திரேலியாவிற்கு வாதிட ஒரு நல்லவிஷயம் கூடக் கிடையாது. ஆட்டம் முழுவதிலும் அவர்கள் அராஜகம் செய்திருக்கிறார்கள், நடுவர்கள் துணையுடன். ஆனால் குரங்கு என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு அனைத்தும் நியாயப்படுத்தப்படுகின்றன.
ஆனாலும் உடனடி மூன்று ஆட்டத் தடை, நிறவெறியாளர் எல்லாம் பம்மாத்துகள்தான். பலமுறை இதுபோன்ற விவகாரங்களில் சூட்டைத் தணிப்பதற்காக முடிவு ஒத்திப்போடப்பட்டிருக்கிறது. ஆனால் ஹர்பஜன் விஷயத்தில் மட்டும் ஏன் இந்த அவசரம்? ஏனிந்த நிறவெறி பட்டம்?
* * *
இதற்கு முன்னால் அதிகமாக அப்பீல் செய்ததற்காக வீரேந்திர ஷேவாக்கிற்கு ஒரு ஆட்டத் தடை விதிக்கப்பட்டது. சிட்னி ஆட்டத்தில் தொடர்ச்சியாக அதிக முறையீடுகள் செய்தற்காகவும், பிடிக்காத கேட்சிற்குத் தொடர்ந்தும் அப்பீல் செய்ததற்கு, முதல் இன்னிங்க்ஸில் பந்து மட்டையில் பட்டது என்று தெரிந்தும் (இதை ஸைமண்ட்ஸ் பேட்டியில் பெருமையாகச் சொல்லியிருக்கிறார்) வெளியேறாமல் ஏமாற்றியதற்கும் பாண்டிங், ஸைமண்ட்ஸ், கில்கிறைஸ், கிளார்க் அணைவருக்கும் கூடவே ஒரு ஆட்டத் தடை விதிக்கக் கோர வேண்டும்.
* * *
ஸ்டீவ் பக்னர்?? ஒரு காலத்தில் இவர் மீது எனக்கு நிறைய மதிப்பு இருந்தது. இப்பொழுது கட்டாயம் கிடையாது. எப்பொழுது நேரடியாக ராகுல் திராவிடை கிண்டல் செய்ய பந்தை முகர்ந்து பார்த்தாரோ அப்பொழுதே இவர் நடுவுநிலைமை(யின்மை) – இந்தியாவிற்கு எதிராக – வெளிச்சமாகிவிட்டது.
இந்த ஆட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இந்தியாவிற்கு எதிராகத் தவறான தீர்ப்பளிப்பதில் காட்டிய விரைவும், ஆஸ்திரேலியாவிற்கென மூன்றாவது நடுவரைக் கூட துணைக்கழைக்காமல் விரைவாகச் செயல்பட்டதும் வெள்ளிடை. இவரை நடுவில் நிறுத்திக் கொண்டு அடுத்த ஆட்டத்தை இந்தியா விளையாட முயன்றால் அதைவிட அபத்தம் கிடையாது.
* * *
பொதுவில் கிரிக்கெட் ஆட்டத்தைப் பொறுத்தவரை நான் அதிகம் எழுதுவதில்லை, வெறும் நடப்புகளை அவதானிப்பவனாகவே இருந்து வந்திருக்கிறேன். இந்த நேரத்திலாவது ஆஸ்திரேலியாவைப் பற்றி எழுத வேண்டும்.
இப்பொழுது ஆட்டம் முழுவதும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவின் கையில்தான் இருக்கிறது. அவர்கள் :
- ஹர்பஜன் உடனடி தடையை நீக்கக் கோரவேண்டும்; ஹர்பஜன் அப்படிச் சொல்லியிருந்தாலும் அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட தடைதான் கொடுப்பது நியாயம் (முன்னுதாரணங்களின்படி)
- பொதுவில் ஒன்றுக்கு மேற்பட்ட இழி நடவடிக்கைகளுக்காக பாண்டிங்கைத் அடுத்த ஆட்டத்தில் தடை செய்யச் சொல்ல வேண்டும்
- விரேந்திர ஷேவாக் முன்னுதாரணத்தை வைத்து பாண்டிங், ஸைமண்ட்ஸ், கில்கிறைஸ்ட், கிளார்க் மீது நடவடிக்கை எடுக்கக் கோர வேண்டும்.
- ஸ்டீவ் பக்னரை அடுத்த டெஸ்ட்டில் நடுவராக இருக்க ஒத்துக் கொள்ளக்கூடாது.
- குறைந்தபட்சம் தொடரின் இனிவரும் போட்டிகளை அதிகார பூர்வமற்றவையாக மாற்ற வேண்டும். (சென்சூரியன் பார்க் உதாரணம்)
* * *
இந்த ஆட்டத்தில் இந்தியா பெருமையாகச் சொல்லிக் கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன, முதல் நாள் ஆஸ்திரேலியாவைத் திணற அடித்தது (ஸைமஸ்ட்ஸ்க்கு இரண்டாம் ‘கிச்சான்’ கிடைக்கும் வரை). இன்னொரு முறை கிரிக்கெட்டில் இந்த்தனை ஆரவரங்களுக்கு இடையிலும் அழகு மிஞ்சியிருப்பதை நிரூபித்தி லெக்ஷ்மண், அற்புதமான சச்சினின் அளவுபடுத்தப்பட்ட ஆட்டம், இரண்டாம் இன்னிங்க்ஸில் கங்கூலி ஆடிய விதம், அணில் கும்ளேயின் போராட்டகுணத்தைக் காட்டும் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆட்டம் என்று எத்தனையோ.
ஆனால் உண்மையாகவே தலைநிமிர்ந்து நிற்க வைத்தது பொங்கும் கோபத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு ஹர்ஷா போக்ளேக்கும் மார்க் டைலருக்கும் அவர் கொடுத்த ஆட்ட இறுதி நேர்முகம்.
காலம் கடந்து அனில் கும்ளே தலைவராகியிருப்பது இந்தியாவின் துரதிருஷ்டம்.
கிரிக்கெட் பற்றி சிலாகித்துச் சொல்ல எதுமில்லை எனக்கு. ஆனால், ‘ கிச்சான் ‘ என்ற சொல்லை ரொம்ப வருடங்களுக்கு அப்புறம் கேட்கிறேன்/படிக்கிறேன். மகிழ்ச்சி.
Well,having lived here for 6 years,the results are not surprising..Huge chunk of australian cricket fans don’t actually like their cricketers off-field and onfield behaviour. “Monkey, racist” issue is extremely funny coz Australia is generally known as country of immigrants..30% of Aus population come from non-english backgroud,but you won’t find any national players from non-english or “indiginous” background in the history of Australian Cricket..This is so true even in the state level cricket.So, the first and second generation ppl of Greeks,Italian,ppl from the middle east,etc origin don’t really like their cricket team for the selecters racist attitude.
முன்பு ஒரு முறை தரையில் பட்ட பந்தை பிடித்து அப்பீல் செய்ததற்காக ராஷீத் லதீபை ஐந்து ஆட்டங்களுக்கு விலக்கினார்கள். இன்று அதனையே செய்த பாண்டிங்குக்கு ஒரு தண்டனையும் இல்லை!! என்னத்த சொல்ல…
Excellent!
Venkat, did you get my mail? check your bulk mail
வாசன் – நான்கூட அதிகம் யோசிக்கமலேயே இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது இப்பொழுதுதான் தெரிகிறது.
கோபாலன் – ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு வெறி பிடித்திருக்கிறது. இது ஆட்டக்காரர்கள், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும். இதைப் பற்றி இன்னொரு சமயம் விரிவாக எழுதவேண்டும்.
வேறு விதத்தில் – கனடா போன்ற நாட்டில் வசித்துக் கொண்டு ஆஸ்திரேலியாவை வெளியிலிருந்து பார்க்கும்பொழுது (இரண்டு நாடுகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டுதானே), பொதுவில் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.
கொத்தனார், கனேஷ் – நன்றி
Balaji, Thanks for this alert. Just now saw the mail and I am glad. Have written you. Cheers.
அற்புதமாக எழுதியுள்ளீர்கள் இந்த சம்பவங்கள் எல்லாம் முன்பே வேறுமாதிரியாக ஒவ்வொரு டூரின் போதும் வெளிப்பட்டுள்ள்துதான்.ஆனால் இப்போது ஒரு பக்னரும் சேர்ந்துகொண்டது புதிதாக உள்ளது.அது ஒரு கேவலமான அணி என்பதை உலகுக்கு தெரிவிக்க இது நல்ல வாய்ப்பு. இந்திய பணம் கொழிக்கும் தொழிலான இதில் BCC யை விட்டுவிட்டு அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது, ஆகையால் துணிச்சலாக ஆஸ்திரேலியா ஒரு வாச்சாங்குலி அணிதான் என்பதை நமது திராவிட அரசியல் கழக பேச்சாளர்கள் போல சிலரை உருவாக்கி நார அடிக்கலாம்.
Good analysis on the situation, Venkat !
I have already done three postings on this “galAttA” and am tired to write further
India (BCCI) have succeeded in forcing ICC to agree to what they had appealed for and that I think, is fair enough reason to carry on with the game of cricket.
http://balaji_ammu.blogspot.com/2008/01/2-1.html
http://balaji_ammu.blogspot.com/2008/01/409.html
http://balaji_ammu.blogspot.com/2008/01/410-5.html
ஓர் ஆட்டத்தில் நடுவர்களது தவறான முடிவால் வெல்வதோ தோற்பதோ பெரிதான விஷயமாக எனக்குத் தெரியவில்லை. இங்கு பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு இரண்டு நடுவர்களும் ஏற்கெனவே பேசிவைத்து முடிவுசெய்ததுபோல, ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் முடிவுகளைக் கொடுத்தனர் என்பது. அதை நான் ஏற்க மறுக்கிறேன்.
அப்படி ஒரு குற்றச்சாட்டு இருந்தாலும்கூட, அந்தக் குற்றச்சாட்டை இந்தியா ஐசிசியில் வைத்து நடுவர்களை அழைத்து விசாரிக்க ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் தொடரின் நடுவிலேயே, நடுவரை மாற்றினால்தான் ஆயிற்று என்று தகராறு செய்தது; இல்லாவிட்டால் தொடரைப் புறக்கணிப்போம் என்றது – இரண்டுமே அசிங்கமான செயல்.
இந்தியா பக்கம் இருந்த தார்மீக ஆதரவு இந்தச் செய்கையால் வெகுவாகக் குறைந்துள்ளது என்பதே என் கருத்து.
பக்னர்மீது இந்தியா வெளிப்படையாகச் சாட்டக்கூடிய குற்றம் அவர் செயல்திறன் குறைந்த ஒரு நடுவர் என்பதே. அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. ஆனால் அவர் இந்தியாவின் எதிரி; வேண்டுமென்றே இந்தியாவுக்கு எதிரான முடிவுகளை எடுப்பவர் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது. அப்படி அவர் ஏன் செய்தார் – மோடிவ் – என்பதை வெளிக்கொணர முடியாது. அடிப்படையில் அவர் இந்தியா எனும் நாட்டுக்கு எதிரானவர்; அல்லது யாரிடமோ காசு வாங்கிவிட்டார்; அல்லது அவருக்கு வெள்ளைக்கார நாடுகள் பிடித்தமானவை… இப்படியான எந்தக் கூற்றும் நிற்காதவை.
தெருவில் போகும் தனிமனிதர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் எதைவேண்டுமானாலும் சொல்லலாம். இந்திய கிரிக்கெட் வாரியம் இப்படியெல்லாம் பேச முடியாது.
Pingback: கிரிக்கெட் - நடுவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டிய நேரம்