Archive for May, 2004

தமிழ் செம்மொழியாதல்

கடந்த வாரம் இந்தியவின் ஆளும் கூட்டணி தங்களுடைய குறைந்த பட்ச செயல்திட்ட அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இதில் தமிழ் செம்மொழியாக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரம் கிடைக்கவில்லை.
இந்த விஷயம் குறிந்த சில எளிய சந்தேகங்களை பத்ரி எழுதியிருந்தார். தொடர்ந்து மெய்யப்பன் செம்மொழியாக அங்கீகரிக்கப்படுவதால் கிடைக்கும் ஆதாயங்கள் சிலவற்றைக் குறிந்து விளக்கினார். அதில் சுட்டப்படிருக்கும் மணவை முஸ்தபாவின் தீராநதி பேட்டியைக் குறிந்த சந்தேகங்கள் சில [...]


வெ.சா – டொராண்டோ நிகழ்ச்சி

கலை, இலக்கிய விமர்சகர் திரு வெங்கட் சாமிநாதனுடன் ஒரு கலந்துரையாடல்


இணையத்தில் தமிழகப் பள்ளி

இன்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் இணையதளத்தைப் பார்க்க நேரிட்டது. சந்தோஷமாக இருக்கிறது.
தமிழகப் பள்ளிகளின் பாடத்திட்டத்தை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். ஆறாம் வகுப்பிலிருந்து +2 வகுப்புவரை எல்லா பாடங்களுக்குமான திட்டகள் முழு வடிவில் கிடைக்கின்றன. வகுப்பைத் தெரிவு செய்து, பாடத்தைத் தெரிவு செய்து பயிற்று மொழியை (தமிழ்/ஆங்கிலம்) தெரிவு செய்ய பாடத்திட்டம் பிடிஎ·à®ªà¯ கோப்பாகக் கிடைக்கிறது. மிகவும் தெளிவாக வடிவமைக்கப்பட்ட இணைய தளம். தேவையற்ற படங்கள் இல்லை, அனாவசிய உபரி தகவல்கள் அள்ளித் தெளிக்கப்படவில்லை. [...]


நாத்திகம் பயில்? -2

நாத்திகம் பயில்? என்று தலைப்பிடப்பட்ட என்னுடைய குறிப்பிற்கு கார்த்திக் எழுதிய சில கருத்துகளுக்கு என்னுடைய பதில்கள் :
கொஞ்சம் சிரமத்தைப் பார்க்காமல் அருள் செல்வனின் நாத்திகம் பயில் (கேள்விக்குறி இல்லாமல்) வலைக்குறிப்பைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள்.
{அருள் சிக்கிரம் திரும்பி வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்கள், கொஞ்சம் பெண்முதல் சமுதாயங்கள், தந்திரம், சார்வாகம், சாங்கியம், அதர்வண வேதம், நம்மாழ்வார், தேபிப் ரஷோத் சட்டோபாத்யாயா, ராதாகிருஷ்ணன், என்று ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கலாம். [...]


ஷங்கர்-ஜிஞ்ஞர் இரட்டை வயல

சென்ற வெள்ளிக்கிழமை டொராண்டோ Winter Garden Theatre ல் நடைபெற்ற ஷங்கர் & ஜிஞ்ஞர் இரட்டை இரட்டை-வயலின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். உலகிலேயே டொராண்டோ நகரைக் காட்டிலும் பல்லின, பல்கலாச்சார நகரைப் பார்ப்பது கடினம். டொராண்டோ நகரில் மே மாதம் தெற்காசிய மாதமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாதம் முழுவதும் பல இந்திய, பாக்கிஸ்தானிய, நேபாளி, திபெத்தியக் கலைஞர்கள் இசை, நாடகம், தொடங்கி பானை வனைதல், பட்டு நெசவு, உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறார்கள்.. இதற்குக் [...]


ஏழ்மை கைக்கொள்

குறிப்பு: ஒரு வேலையற்ற மதிய உணவு இடைவேளையில் அருள் செல்வனின் நாத்திகம் பயில் குறிப்பை வெட்டியட்டித் திருத்தியது. (அருள், கண்டுக்காதீங்க, அப்பப்ப வருமே அதே கிறுக்குத்தனம்தான்).
ஏழ்மை கைக்கொள்

தன் வாழ்நாள் முழுவதும் ஒருவன் முழு ஏழையாக இருக்கவேண்டும். பல காரணங்கள்.
1. ஏழ்மை மனிதனை விடுவிக்கிறது. சொத்துதான் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகப் பெரும் தளை. செல்வமின்றியிருப்பது மனிதனாகும் பயணத்தின் முதல் அடி. செழுமையும் அது செழுங்கிழை தாங்கப் பணித்தலும் சுதந்திரப்பாதையின் மிகப் [...]


நாத்திகம் பயில் ?

என்னுடைய நண்பன் அருள்செல்வன் வலைக்குறிப்பில் “நாத்திகம் பயில்” என்று தலைப்பிட்டு நாத்திகத்தின் தேவையைக் காட்டியிருக்கிறார். அது தொடர்பாக என்னுடைய கருத்துகள்.
* * *
அருள் சொல்லியிருப்பதில் பல உண்மைகள் இருக்கின்றன. ஆனால் இவற்றில் 99% “கட்டமைக்கப்பட்ட ஆத்திகத்தினால்” (சமயம், மதம், சடங்கு) விளைபவை. இறையுணர்வுக்கு எதிரானது நாத்திகம் என்று கொண்டால் உங்கள் கூற்றுகள் முற்றறுதி உண்மையல்லன. ஒரே ஒரு விஷயம்;


U.Toronto award to Venkat Saminathan

தமிழ் இலக்கியக் கூட்டமும் புத்தகக் கண்காட்சியும்
டொராண்டோ வாழும்தமிழ் ஆதரவில் தமிழில் இன்றைய இயல், இசை, நாடகஙக்ள் பற்றிய ஒரு கலந்துரையாடல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது. அது சமயம் தரமான தமிழ்ப் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

நாள் : சூன் 5, சனிக்கிழமை
இடம்: ஸ்கார்புரோ சிவிக் செண்டர்,

* புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை

[...]


முடிவுமல்ல, ஆரம்பமுமல்ல

முடிவல்ல ஆரம்பம் என்று தலைப்பிட்டு நண்பர் மாலன் அவருடைய தேர்தல் வலைக்குறிப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் தாராளமயமாக்கும் காங்கிரஸ்க்குக் கம்யூனிஸ்ட்களைக் கொண்டு கால்கட்டுப் போட்டு இந்தியர்கள் ஒரு சித்தாந்தப் பரிசோதனையில் இறங்கியிருப்பதாக எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையின் மீதான என்னுடைய எண்ணங்கள் இதோ;
* * *
அன்புள்ள மாலன்
இந்திய மக்கள் ஏதோ கோட்பாடுகளின் அடிப்படையிலான சோதனையில், காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கால்கட்டைப் போட்டு இறங்கியிருப்பதைப் போன்ற தோற்றமளிக்கும் உங்கள் கட்டுரை வியப்பளிக்கிறது. [...]


சதாம் போனார், அமெரிக்கர்க

கடந்த சில நாட்களாக மத்தியக் கிழக்கிலிருந்து வரும் செய்திகள் மிகவும் கவலையைத் தருவதாக இருக்கின்றன. முடிவில்லா நீதிக்கான யுத்தம் (Operation Infinite Justice) என்று பெயரிடப்பட்டு துவக்கப்பட்ட அமெரிக்காவின் இந்தப் போர் முடிவும் நீதியும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. நேற்று அமெரிக்கப் பொதுக்குடிமகன் ஒருவர் பகிரங்கமாக சிரச்சேதம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவரைக் கொல்லுவதை சலனப்படமாக எடுத்து இணையத்தின் வழியே பரப்பியிருக்கிறார்கள். கொல்லுவதற்கு முன்னால் அவருடைய பெயரையும், தாய் தந்தையர் பெயரையும் சொல்லச் சொல்லியிருக்கிறார்கள். பின்னர் ஒற்றை வாளின் [...]