தமிழர்களின் நகைச்சுவை உண
தமிழர்களின் நகைச்சுவை உணர்வு எப்பொழுதும் கேள்விக்குறியாக்கப்பட்ட விஷயமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. அன்றும் இன்றும் என்றும் வார்த்தையாடல் கோமாளித்தனங்களே பெரிதும் நகைச்சுவையாக இரசிக்கப்பட்டு வந்திருக்கின்றன. உதாரணத்திற்கு ஆனந்த விகடன் பாணி நகைச்சுவை;
அவன் ஏன் பேப்பர்ல ‘ஆசிரியர்’ ன்னு பென்சிலால அழுத்தி எழுதிக்கிட்டு இருக்கான்?
To get a good impression of the teacher
–
டேய், எங்கடா போற?
மாவு அரைச்சுகிட்டு வரத்துக்கு!
அதுக்கு ஏன்டா ஒளிஞ்சு, ஒளிஞ்ச் போற?
எங்கம்மா நைஸா அரைச்சுகிட்டு வரச்சொன்னாங்க
—
இப்படியாக எல்லைகடந்த வார்த்தையாடல்களே நகைச்சுவை என்று பெரிதும் இரசிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்தத் தொடரில் வரும் நாட்களில் பல்வேறு ‘பிராண்ட்’ நகைச்சுவைகளை பட்டியலிட உத்தேசம்.
சமீபத்தில் இரசித்த நகைச்சுவை ஒன்று;
{யார்முல்கா – yarmulka – யூதர்கள் மதக்கட்டாயத்தின்படி தலையில் அணிந்துகொள்ள வேண்டிய உச்சந்தலைக்கு மாத்திரமான குல்லா வகை}
தலையில் யார்முல்கா இல்லாமல் வந்த யூத இளைஞனைப் பார்த்து ரபை (யூத குரு) சொன்னார்:
“யேய், தலையில் யார்முல்கா இல்லாமல் வருவது தெய்வகுற்றம், வேசியுடன் படுப்பதைப் போன்றது, தெரியுமா?”
“இல்லை, உங்களுக்குத் தெரியவில்லை. நான் இரண்டையும் முயற்சி செய்திருக்கிறேன். அவற்றை எந்த வழியிலும் ஒப்பிடமுடியாது”
Popularity: 4% [?]
If you enjoyed this post, please consider to leave a comment or subscribe to the feed and get future articles delivered to your feed reader.












Comments
No comments yet.
Leave a comment